மாடு மேய்க்கும் கண்ணே

 

மாடு மேய்க்கும் கண்ணே

 

மாடு மேய்க்கும் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன்

போக வேண்டும் தாயே
தடை சொல்லாதே நீயே

காய்ச்சின பாலு தரேன் கல்கண்டுச் சீனி தரேன்
கை நிறைய வெண்ணைய் தரேன் வெய்யிலிலே போக வேண்டாம்
(மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்)

காய்ச்சின பாலும் வேண்டாம் கல்கண்டுச் சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து ஒரு நொடியில் திரும்பிடுவேன்
(போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே)

யமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்)

கள்வனுக்கோர் கள்வன் உண்டோ? கண்டதுண்டோ சொல்லும் அம்மா?
கள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் ஆக்கிடுவேன்
(போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே)

கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்)

காட்டு மிருகங்கள் எல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டம் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்
(போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே)

பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்)

பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன்
(போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே)

 

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |