Jaya Durga Homa for Success - 22, January

Pray for success by participating in this homa.

Click here to participate

மாடு மேய்க்கும் கண்ணே

 

மாடு மேய்க்கும் கண்ணே

 

மாடு மேய்க்கும் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன்

போக வேண்டும் தாயே
தடை சொல்லாதே நீயே

காய்ச்சின பாலு தரேன் கல்கண்டுச் சீனி தரேன்
கை நிறைய வெண்ணைய் தரேன் வெய்யிலிலே போக வேண்டாம்
(மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்)

காய்ச்சின பாலும் வேண்டாம் கல்கண்டுச் சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து ஒரு நொடியில் திரும்பிடுவேன்
(போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே)

யமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்)

கள்வனுக்கோர் கள்வன் உண்டோ? கண்டதுண்டோ சொல்லும் அம்மா?
கள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் ஆக்கிடுவேன்
(போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே)

கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்)

காட்டு மிருகங்கள் எல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டம் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்
(போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே)

பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்)

பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன்
(போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே)

 

164.3K
24.6K

Comments

Security Code
66796
finger point down
இறை சிந்தனையை கொண்டாடி வளர்க்கும் பக்தர்கள் உள்ள இணையம் -செந்தில் குமார்

இது சாமானியர்களுக்கு ஓரு பொக்கிஷம் -முரளிதரன்

அறிவு வளமான இணையதளம் -நந்தன் முருகன்

தங்களின்அருமையான பதிவுகள் மனிதனை தான் யார் என்று அறியவும் சக மனிதனை மனிதாபிமான முறையில் நடத்தவும் உதவுகிறது. நன்றி -User_smih3n

எல்லோருக்கும் உதவிகரமான இணையதளம் 🤗 -கமலா

Read more comments

Knowledge Bank

பஸ்மம் (விபூதி) அணிவது ஏன் அவ்வளவு முக்கியம் என சிவபுராணம் கூறுவது என்ன?

பஸ்மம் அணிவது நாம் சிவபெருமானுடன் இணைக்கப்படுகிறோம், துன்பங்களிலுருந்து விடுபட நிவாரணம் பெறுகிறோம் மற்றும் அது நம் ஆன்மீக தொடர்பை மேம்படுத்துகிறது

அகத்தியர் அருளிய முருகன் மந்திரம்

ஓம் முருகா,குரு முருகா,அருள் முருகா,ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாக்ஷ்ரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவாஹா.

Quiz

எத்தனை அக்ஷரங்களுக்கு மேலிருப்பவை, மாலா மந்திரங்கள் எனப்படும்?
Devotional Music

Devotional Music

பக்தி பாடல்கள்

Click on any topic to open

Copyright © 2025 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize
Whatsapp Group Icon
Have questions on Sanatana Dharma? Ask here...