ராஜா ப்ருதுவின் கதை

துருவனின் வம்சத்தில் அங்கன் என்ற ஒரு ராஜா வாழ்ந்து வந்தார். அவருடைய புத்திரர் வேனன்.வேனன் மிகவும் கொடுமை காரணமாக இருந்தான்.அங்கண் தனது மகனை திருத்துவதற்காக மிகவும் சிரமப்பட்டான்.ஆனால் அவன் திருந்தவில்லை. அங்கன் காட்டிற....

துருவனின் வம்சத்தில் அங்கன் என்ற ஒரு ராஜா வாழ்ந்து வந்தார். அவருடைய புத்திரர் வேனன்.வேனன் மிகவும் கொடுமை காரணமாக இருந்தான்.அங்கண் தனது மகனை திருத்துவதற்காக மிகவும் சிரமப்பட்டான்.ஆனால் அவன் திருந்தவில்லை. அங்கன் காட்டிற்கு செல்ல தீர்மானித்தான். வேறு வழி இல்லாமல் தனது மகனையே ராஜாவாக அபிஷேகம் செய்து வைத்தான்.வேனன் தனது நடந்த எல்லா நல்ல காரியங்களையும் நிறுத்தி விட்டான். முனிவர்கள் அனைவரும் கூடி எடுத்துரைத்தும் அவர் திருந்தவில்லை ஆகையால் எல்லா முனிவர்களும் சேர்ந்து தங்களது மந்திர சக்தியால் அவனை அழித்து விட்டனர். இதிலிருந்து நாம் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் ராஜாவின் அதிகாரம் என்பது பரம அதிகாரம் அல்ல. அந்த ஆணை தான் பெரியது. மக்களுடைய நலம்தான் ராஜாவின் முக்கியமான தர்மம். இங்கு அம்முனிவருக்குஅப்படிப்பட்ட சக்தி எங்கிருந்து வந்தது அதுதான் தெய்வத்தின் சக்தி ஆகும். தெய்வத்தில் சக்தி எப்பொழுதும் சத்தியத்தையும் தர்மத்தையும் காப்பாற்றுவதாகும். ரிஷிகளும் முனிவர்களும் இந்த உலகத்தின் நன்மைக்காக இருப்பவர்கள் ஆவர். அவர்களுக்கு சுயநலம் கிடையாது. ஆகையால் கடவுள் அவர்களுக்கு அப்படி ஒரு சக்தி அளித்துள்ளார். வேனனுக்கு பிறகு யார் ராஜாவா அவர் என்று இருந்தது. ரிஷிகள் அனைவரும் சேர்ந்து வேனனின் ஜடத்தின் கையை கடைந்தார்கள். மந்தனம் என்பது ஒரு விசேஷமான கிரேவி ஆகும். மந்தனம் என்பது தயிரிலிருந்து வெண்ணெய் எடுக்கும் செயலாகும். பாற்கடலை மந்தனம்செய்து அமிர்தம் எடுத்தார்கள் அதுபோல யாகத்திற்கு அக்னி எடுப்பது மரணியை மந்தனம் செய்து எடுக்கிறார்கள். அதேபோல் வேனனின் கையை கடைந்து ஒரு தம்பதியை உருவாக்கினர். அவர்கள் ராஜா ப்ருது மற்றும் அர்சி அவர். இதில்ப்ருது மகா விஷ்ணுவின் அம்சமாகும்அர்சி லட்சுமியின் அம்சமாகும்.ப்ருதுவின் ராஜ்யாபிஷேகம் நடந்தது மக்கள் அனைவரும் அவனை துதிப்பதற்காக வந்து சேர்ந்தனர்.அவர்கள் வரும்போது பூ பழம் அனைத்தும் கொண்டுவந்திருந்தனர் .ஆனால்ப்ருது அனைவரையும் தடுத்து விட்டு ஒரு தத்துவத்தை கூறினான் . ராஜாக்களை வாழ்த்துவதால் அவர்கள் குருடர் ஆகிவிடுகிறார்கள் ,தான் இப்போது தான் ராஜா ஆகினான் என்றும் அவன் ஆட்சி எவ்வாறு செய்வான் என்று தெரியாத பொழுது எவ்வாறு அவர்கள் வந்து அவனை வாழ்த்துவார்கள் என்று கேட்டான்.(ஸ்லோகம்) உதாரணமாகத் திகழும் உத்தமர்களுக்கு அவர்களை துதிசெய்து பேசுவது பிடிக்காது. ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் பிறர் புகழ கேட்பதால் அவர்களுக்கு அகங்காரம் வரும் ஆகையால் நல்லது செய்யத் தோன்றாது.இந்தக் காலத்தில் ஒன்றை செய்து அதை தெரிய வைத்து நூறாக பாராட்டை கேட்க விரும்புவது தான் இந்த உலகம்.ஆனால் இது நம்முடைய கலாச்சாரம் அல்ல. நம் முன்னோர்கள் அவ்வாறாக இருக்கவில்லை. சிறிது காலத்திற்குப் பிறகு அந்த நாட்டில் பஞ்சம் வந்தது. வரட்சியை வந்தது மக்கள் அனைவரும் ராஜாவிடம் சென்று தங்கள் குறையை கூறினர். என்ன ஆகி இருந்தது என்றால் பூமி தேவி மரம் செடி கொடிகள் அனைத்தையும் தன்னுள்ளே ஒளித்து வைத்திருந்தார். ராஜா பூமி தேவியிடம் சென்று வேண்டினார். ஆனால் பூமிதேவி கண்டுகொள்ளவில்லை. ஆகையால் அம்பை எடுத்து பூமி தேவிக்கு நேராக ஓங்கினார். பூமிதேவி ஒரு பசுமாட்டின் ரூபம் கொண்டு ஓடினாள். ராஜாவும் துரத்திக் கொண்டே சென்றார். பூமி சொர்க்கம் பாதாளம் என்று அனைத்திலும் ஓடினாள் பூமிதேவி. ராஜாவும் அவளைத் துரத்திக் கொண்டு ஓடினார்.கடைசியில் பூமிதேவி ராஜாவிடம் தன் உடம்பிலிருந்து அனைத்தையும் கறந்து கொள்ளும்படி கூறினாள்.நாம் இப்போது காணும் அனைத்து மரம் செடி கொடிகளும் அப்படி ராஜா புருது பூமி தேவியிடம் இருந்து கறந்து எடுக்கப்பட்டதாகும்.

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |