48.0K

Comments

54kyi

திருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன் தேவாதி தேவ நின் (திருவடி) மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி வருத்தப்படுத்த வேண்டாம் பொன்னம்பலவா நின் (திருவ....

திருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன் தேவாதி தேவ நின் (திருவடி) மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி
வருத்தப்படுத்த வேண்டாம் பொன்னம்பலவா நின் (திருவடி)
எடுத்த ஜனனம் கணக்கெடுக்கத் தொலையாது-
இரங்கி மகிழ்ந்து தேவரீர் வேணுமென்று
கொடுத்த மானிட ஜன்மம் வீணாகி போகுதென்
குறை தீர்த்த பாடுமில்லையே (திருவடி)
அடுத்து வந்த என்னை தள்ளலாகாது
அர-ஹராவென்று சொன்னாலும் போதாதோ
தடுத்து வந்தருள சமயம் கோபாலக்ருஷ்ணன்
சந்ததம் பணிந்து புகழ்ந்து போற்றும் (திருவடி)

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |