விஷமக்காரக் கண்ணன்

விஷமக்காரக் கண்ணன்
பொல்லாத விஷமக்காரக் கண்ணன்

வேடிக்கையாய் பாட்டுப் பாடி
வித விதமாய் ஆட்டம் ஆடி
நாழிக்கொரு லீலை செய்யும்
நந்த கோபால கிருஷ்ணன்
விஷமக்காரக் கண்ணன்
பொல்லாத விஷமக்காரக் கண்ணன்

நீலமேகம் போலே இருப்பான்
பாடினாலும் நெஞ்சில் வந்து குடியிருப்பான்
அவன் நீலமேகம் போலே இருப்பான்
பாடினாலும் நெஞ்சில் வந்து குடியிருப்பான்

கோலப் புல்லாங் குழலூதி
கோபிகைகளை கள்ளமாடி
கொஞ்சம் போல வெண்ணை தாடி
என்று கேட்டு ஆட்டமாடி
விஷமக்காரக் கண்ணன்
பொல்லாத விஷமக்காரக் கண்ணன்

பக்கத்து வீட்டுப் பெண்ணை அழைப்பான்
முகாரி ராகம் பாடச்சொல்லி வம்புக்கிழுப்பான்

எனக்கு அது தெரியாது என்றால்
நெக்குருகக் கிள்ளி விட்டு
அவளை நெக்குருகக் கிள்ளி விட்டு
அவள் விக்கி விக்கி அழும்போது
இதுதான்டி முகாரி என்பான்
விஷமக்காரக் கண்ணன்

வெண்ணை பானை மூடக்கூடாது
இவன் வந்து விழுங்கினாலும் கேட்கக்கூடாது
இவன் அம்மாக்கிட்டே சொல்லக்கூடாது
சொல்லிவிட்டால் அட்டகாசம் தாங்க‌ ஒண்ணாது

சும்மா ஒரு பேச்சுக்கானும்
திருடன் என்று சொல்லிவிட்டால்
அவனை திருடன் என்று சொல்லிவிட்டால்
உன் அம்மா பாட்டி அத்தை தாத்தா
அத்தனையும் திருடனென்பான்
விஷமக்காரக் கண்ணன்

வேடிக்கையாய் பாட்டுப் பாடி
வித விதமாய் ஆட்டம் ஆடி
நாழிக்கொரு லீலை செய்யும்
நந்த கோபால கிருஷ்ணன்
விஷமக்காரக் கண்ணன்

 

Vishamakara Kannan by OS Arun

 

17.7K

Comments

z78pf

சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த மந்திரம் எது?

சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த மந்திரம் - நமசிவாய. இது பஞ்சாக்ஷர மந்திரம் எனப்படும். இந்த மந்திரம் ஓம் உடன் ஓம் நமசிவாய என்ற வடிவத்திலும் உச்சரிக்கப்படுகிறது.

சப்தரிஷி என்பவர்கள் யார்?

சப்தரிஷிகள் மிகவும் முக்கியமான ஏழு ரிஷிகள் ஆவார்கள். இவர்கள் யுகங்களில் மாற்றக் கூடியவர்கள் ஆவார். வேதாங்க ஜோதிடத்தின் அடிப்படையில் சப்தரிஷி மண்டலத்தில் உள்ள பிரகாசமான அந்த ஏழு ரிஷிகள் அங்கிரஸ், அத்ரி, க்ரது, புலஹர், புலஸ்த்யர், மரீசீ மற்றும் வஸிஷ்டர் ஆவார்கள்.

Quiz

வியாசர் சொல்லிய புராணங்களை எழுதியது யார்?
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |