
அருள்மிகு வீரராகவப்பெருமாள் திருக்கோயில்
திருப்பூர் இறைவன் அருள்மிகு வீரராகவப்பெருமாள் இறைவி
கனகவல்லி தாயார், பூமாதேவி தாயார் தல விருட்சம் மகிழ மரம் ஆகமம்
பாஞ்சராத்ராகமம் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள திருக்கோயில். காஞ்சி மாந்தியின் தென்பகுதியில் அமைந்துள்ள சிறப்பானவைணவத்தலம்.
- மகாபாரதக் கதையில், விராட பருவம் எனும் பகுதியைச் சுற்றி அமைந்த தலவரலாற்றைக் கொண்டது. பாண்டவர்கள் எவரும் அறியாமல் அஞ்ஞாதவாசம் இருந்த நாட்களில், கௌரவர்கள் அவர்களது பசுக்களை ஒட்டிச் செல்ல, பாண்டவர்கள் அவர்களை விரட்டியடித்து பசுக்களை மீட்டனர். பசுக்களைத் திருப்பி அழைத்து வருகையில், இத்தலத்தில் திருமாலை வணங்கினராம்.
- அழகிய மூன்று நிலை இராஜகோபுரத்துடன் கூடிய திருக்கோயில், இரண்டு சுற்றுப் பிரகாரங்களைக் கொண்டபடி, கிழக்கு திசையை நோக்கியவாறு அமைந்துள்ளது. தெற்கில் திருமுகமும், வடக்கில் திருவடியும் கொண்டு புஜங்க சயனத்தில், அழகுறக் காட்சி தந்து அருள்பாலிக்கிறார் வீரராகவப் பெருமாள்.
சயனக்கோலத்தில் இருந்தாலும், மரக்கால் படி
ஒன்றைத் தலைக்கு வைத்தபடி, பக்தர்களைப் பார்த்தபடி காட்சி தருவது வீரராகவப் பெருமாளின் தனிச்சிறப்பு, சிறப்பு வழிபாடு நாட்களில் முத்தங்கி சேவை, நெஞ்சங்களைக் கொள்ளை கொள்ளும். படியளந்த பெருமாள் என்றும் வேறு ஒரு திருநாமம் உண்டு.
கனகவல்லித் தாயார் என்ற திருநாமத்துடன் தனிச் சந்நிதி கொண்டுள்ளார். ஸ்ரீதேவி, உற்சவர் மகாலட்சுமித் தாயார். வியாசராயர் பூஜித்த ஆஞ்சநேயர் திருமேனி, பழமையானது. வெற்றிலை மாலை சார்த்தி வழிபடுதல், இவரது சந்நிதியில் தனிச்சிறப்பு ஆகும்.
பெருமாளுக்கு திருவோணம் நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதுபோல, திருஆதிரை நாட்களில் கருடாழ்வாருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
உக்கிர நரசிம்மரும், யோக நரசிம்மரும் புடைப்புச் சிற்பமாக அமையப்பெற்ற கல்தூண் ஒன்று, பக்தர்களின் கவனத்தைக் கவருவதாக உள்ளது. 16 கால் மண்டபம் ஒன்று இங்கே இருந்ததாகவும், காலப்போக்கில், அது உருக் குலைந்து, ஒரு கல்தூண் மட்டுமே மிச்சம்! என்பர்.
வைகாசி மாதத்தில் நடைபெறும் பெருவிழாவில், அருகில் உள்ள சிவாலயத்தின் விசுவேசுவரரும் பெருமாளும் ஒன்றாகத் தேரில் வலம் வருவது, திருப்பூருக்கே உள்ள தனிச்சிறப்பாகும்.
நாள்தோறும் மூன்று கால வழிபாடு நடைபெறுகிறது.
அன்னதானம்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள அன்னதானத் திட்டத்தின்கீழ் பக்தர்களுக்கு மதியம் 12.15 மணியளவில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
திருக்கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 மணி - பகல் 12.00 மணி மாலை 4.00 மணி - இரவு 8.00 மணி தொலைபேசி: 0421-2204101
Astrology
Bhagavad Gita
Bhagavatam
Bharat Matha
Devi
Devi Mahatmyam
Ganapathy
Garuda Puranam
Glory of Venkatesha
Hanuman
Kathopanishad
Mahabharatam
Mantra Shastra
Mystique
Practical Wisdom
Purana Stories
Radhe Radhe
Ramayana
Rare Topics
Rigveda Explained
Rituals
Sages and Saints
Shiva
Spiritual books
Sri Suktam
Story of Sri Yantra
Temples
Vedas
Vishnu Sahasranama
Yoga Vasishta