சனாதன தர்மத்தின் அனைத்து புத்தங்களும் ஒரு விஷயத்தை மிகத் தெளிவாகக் கூறுகின்றன:
உங்களைச் சுற்றியுள்ள உலகம் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும்போது மட்டுமே நீங்கள் மகிழ்ச்சியையும் அமைதியையும் பெற முடியும்.
இதைப் புரிந்து கொள்ள நீங்கள் விஞ்ஞானியாக இருக்க வேண்டியதில்லை. இது எளிமையானது.
உங்கள் கண்கள், காதுகள், தோல், மூக்கு மற்றும் நாக்கு வழியாக உங்களுக்குள் செல்லும் உணர்வுகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. இவை மட்டுமே உங்கள் ஆதாரங்கள். இந்த ஐம்புலன்கள் வழியாக நம் உடம்பின் உள்ளே செல்வதெல்லாம் உடம்பிற்க்கு வெளியில் இருந்து வருகிறது.
வெளியில் இருப்பது துன்பமானதாக இருந்தால், உள்ளே செல்வதும் துன்பகரமானதாகவே இருக்கும், அது உங்களையும் துன்பப்படுத்திவிடும்.
எனவே, நீங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், உங்களைச் சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியடையச் செய்யுங்கள்.
இதனால்தான், சனாதன தர்மத்தில், நாம் நமக்காக எப்போதாவது தான் பிரார்தனை செய்கிறோம். பிரார்த்தனைகளில் நீங்கள் பெரும்பாலும் பன்மை வார்த்தைகளைக் காணலாம்: நாங்கள், எங்களுக்குக் கொடுங்கள்-(மிகவும் அரிதாகவே) எனக்குக் கொடுங்கள். குறிப்பாக வேதங்களில் நானும் என்னையும் காண்பது மிகவும் அரிது. ஒருமை வடிவத்தில் பயன்படுத்தப்பட்டாலும், அது பெரும்பாலும் பரந்த பொருளைக் கொண்டுள்ளது, பன்மைத்தன்மையைக் குறிக்கிறது.
ஸர்வே ப⁴வந்து ஸுகி²ன꞉
ஸர்வே ஸந்து நிராமயா꞉
ஸர்வே ப⁴த்³ராணி பஶ்யந்து
மா கஶ்சித்³து³꞉க²பா⁴க்³ப⁴வேத்
(மொழிபெயர்ப்பு: எல்லா உயிரினங்களும் மகிழ்ச்சியாக இருக்கட்டும், அனைவரும் நோயிலிருந்து விடுபடட்டும். அனைவரும் மங்களகரமானதை மட்டுமே பார்க்கட்டும், யாரும் துன்பப்படக்கூடாது.)
நீங்கள் கூர்ந்து கவனித்தால், இதுவும் மிகவும் 'சுயநல' பிரார்த்தனை தான். எல்லோரும், குறிப்பாக உங்களைச் சுற்றியுள்ளவர்கள், வசதியாக இருக்கட்டும்-ஏனெனில் அப்போது தான் நீங்கள் வசதியாக இருப்பீர்கள். அவர்கள் வசதியாக இல்லையென்றால், அவர்கள் உங்களை வசதியாக இருக்க விடமாடார்கள்.
இதைக் கருத்தில் கொள்ளுங்கள்:
எதிரி நாடு உங்களைத் தாக்கும். ஏன்? அவர்களுக்கு அமைதி இல்லாததால், அவர்கள் அதிருப்தி அடைந்து, பயத்தில் வாழ்கின்றனர். எனவே, நீங்கள் பாதுகாப்பாக இருக்க, உங்கள் எதிரி அமைதியைக் காணவும், திருப்தி அடையவும், உங்களுக்கு பயந்து வாழவும் பிரார்த்தனை செய்யுங்கள்.
அனைவரும் நலமாக இருக்கட்டும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள், குறிப்பாக உங்களுக்கு நெருங்கியவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், உங்கள் பெரும்பாலான நேரத்தை மருத்துவமனைகள் அல்லது மருத்துவர்களிடம் செலவிடுவீர்கள்.
எல்லோரும் பத்ரம் (நல்ல விஷயங்களை) பார்க்கட்டும். உங்களைச் சுற்றியுள்ளவர்களின் அனுபவங்கள் நேர்மறையாக இருக்கட்டும். உங்களுக்கு இது தெரியும்: உங்கள் மனைவி, மகன் அல்லது மகள் வேலையில் சிக்கலை எதிர்கொண்டால், அதன் உணர்ச்சிகரமான சுமையை நீங்கள் தாங்குகிறீர்கள்.
யாரும் எந்த வகையிலும் துன்பப்பட வேண்டாம். அதனால் அவர்கள் தங்கள் துன்பங்களை உங்களிடம் அனுப்ப வேண்டாம்.
ஒருமுறை, ஒருவரிடமிருந்து ஒரு புத்திசாலித்தனமான சொல்லைக் கேட்டேன்:
'என் அண்ணன் என்னை விட பணக்காரனாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் பிரார்த்தனை செய்கிறேன். அதனால் அவர் என்னிடம் பணம் கேட்க மாட்டார்.'
இது ஒரு உணர்தல். உலகமும் உங்களைச் சுற்றியுள்ளவர்களும் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் மட்டுமே, நீங்களும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருப்பீர்கள்.
எனவே, உங்களுக்காக பிரார்த்தனை செய்வதை விட, மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்ய ஆரம்பியுங்கள். இதை சனாதன தர்மம் நமக்கு எப்பொழுதும் சொல்லிக் கொண்டே இருக்கிறது.
அவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் மாறுவீர்கள்.
Astrology
Bhagavad Gita
Bhagavatam
Bharat Matha
Devi
Devi Mahatmyam
Ganapathy
Garuda Puranam
Glory of Venkatesha
Hanuman
Kathopanishad
Mahabharatam
Mantra Shastra
Mystique
Practical Wisdom
Purana Stories
Radhe Radhe
Ramayana
Rare Topics
Rigveda Explained
Rituals
Sages and Saints
Shiva
Spiritual books
Sri Suktam
Story of Sri Yantra
Temples
Vedas
Vishnu Sahasranama
Yoga Vasishta