
குரு கணேஷாப்யாம் நமஹ மயூரேஷாய நமஹ
மோரேஷ்வரம் மகாராஷ்டிரால மோர்காவ்னு ஒரு இடத்துல மயூரேஷ்வரரா இருக்கார் கணபதி
இத காணபத்திய தீர்த்தம்னும் பூஸ்வானந்தர்னும் சொல்லுவா
அஷ்ட விநாயக தர்சனங்கள்ல இவரைத்தான் முதல்ல தர்சனம் பண்ணனும்
முத்கல புராணத்துல ௨௨ அத்தியாயங்களால மயூரபுரின்னு இந்த இடத்தை பத்திதான் சொல்றார் முத்கல மஹர்ஷி
த்ரேதா யுகத்துல சிந்துங்கிற அசுரனை அழிக்கிறதுக்காக அவதாரம் எடுத்தவர் இந்த மயூரேஷ்வரர்
லேன்யாத்ரி என்கிற மலையில குகைக்குள்ள பார்வதி தபஸ் பண்ணிட்டு இருந்தா
அப்போ பார்வதிக்கு பொறந்தவர் மயூரேஸ்வரர்
இத ஆத்தியபீடம்னு சொல்லுவா
கணபதியோட எல்லா க்ஷேத்ரங்களிலும் முதல் முதலாக கட்டப்பட்ட க்ஷேத்ரம் இது
அதனால ஆத்திய பீடம்
கணபதியோட கோவில்களிலேயே ஸ்ரேஷ்டமான ஒரு கோவில்
18ஆம் நூற்றாண்டுல மராட்டா பேஷ்வா இவரைதான் தங்களோட குலதெய்வமா வணங்கிண்டு இருந்தா
கைலாசத்துல எப்படி சிவனோட சான்னித்தியம் எப்போதும் இருக்குமோ அதே மாதிரி இந்த மயூரபுரியில கணபதியோட சான்னித்தியம் எப்போதும் இருக்கும்
பூஸ்வானந்தம்
ஸ்வானந்த புவனம் கணபதியோட லோகம்
விஷ்ணுக்கு அப்படி வைகுண்டமோ அந்த மாதிரி கணபதியோட லோகம் ஸ்வானந்த புவனம்
இது பூஸ்வானந்தம் பூமியில இருக்கக்கூடிய கணபதியோட லோகம்
இந்த கணபதிக்கு ஆறு கைகள் வெள்ளை நிறம்
மயிலை தன்னோட வாகனமா வச்சுண்டு இருக்கிறதுனால மயூரேஸ்வரர்
சிவபெருமாள் லோகத்தை அழிக்கக்கூடிய விஷத்தை குடிச்சதுனால அவருக்கு கழுத்து நீளமாயிடுத்து
அதனால அவரை நீலகண்டன்னு சொல்றான்
மயிலுக்கும் கழுத்து நீளமா இருக்கு
மயிலுக்கும் நீலகண்டன்னு பேரு
அந்த மயில தன்னோட வாகனமா வச்சுண்டு கணபதி நான் சிவ தத்துவமே தான்னு எடுத்து காட்டுறார்
சிவன் எப்படி லோகத்தை அழிக்கக்கூடிய விஷத்தை குடிச்சு நம்ம எல்லாரையும் காப்பாத்தினாரோ, அதே மாதிரி கணபதி இந்த லோகத்துல இருக்கிற தீமையும் துரிதங்களையும் அழிச்சு நான் உங்களை காப்பாத்துவேன் அப்படின்னு எடுத்துக்காட்டுறார்
அந்த கோவில் முன்னாடி பார்த்தோம்னா ஒரு நந்திகேஸ்வரரோட சிலை இருக்கு
சாதாரணமா கணபதி கோவில்ல இருக்காது
அந்த கோவிலுக்கு பக்கத்துல இருக்கிற சிவன் கோவில்ல பிரதிஷ்டை பண்றதுக்காக எடுத்துண்டு போயிட்டு இருந்தாளாம்
அந்த நந்திகேஷ்வரர் அங்கேயே உட்கார்ந்துட்டார்
அதுக்கப்புறம் அவரை நகர்த்த முடியல
நந்திகேஷ்வரருக்கே தெரிஞ்சிடுத்து சிவன் பிரத்யக்ஷமா நேரா இருக்காரே இங்கேதான் நம்ம உட்காரணும்
உட்கார்ந்துட்டார்
சிவ தத்துவமே தான் இந்த கணபதி
ஆரம்பத்துல இவர் பார்வதி தேவிக்கு ஒரு சாதாரண குழந்தை மாதிரி பொறந்து சஸ்திர வித்தையும் சாஸ்திர வித்தையும் எல்லாம் கத்துண்டார்
அவருக்கு சிவன் குணேஷன்னு பேர் வச்சார்
எல்லா குணங்களுக்கும் ஈஷன்
சிந்து அசுரனை அழிக்கிற காலம் எப்ப வந்ததோ, அப்ப அழிக்கிறதுக்காக கிளம்பினார்
போகும்போது ஒரு மரத்துல போய் முட்டிண்டார்
ஒரு மயிலோட முட்டை வந்து கீழே விழுந்தது
ஒரு மயில் அதுல இருந்து வெளியில வந்தது
அந்த மயிலை தன்னோட வாகனமா எடுத்துண்டு அசுரனை அழிக்க போனார்
மயில்வாகனர் நம்ம முருகன் மாதிரி
சிந்து அசுரன் தபஸ் பண்ணி சூரியன்கிட்ட இருந்து வரமாக அமிர்தத்தோட ஒரு பாத்திரத்தை வாங்கி இருந்தான்
அதை குடிச்சிட்டு மூணு லோகங்களிலும் அக்கிரமம் பண்ணிட்டு இருந்தேன்
அவனை அழிக்கிறதுக்காக மயூரேஸ்வரரா அவதாரம் எடுத்த கணபதி அவனோட உடம்பை கிழிச்சு ஒரு சொட்டு அமிர்தம் கூட மிச்சம் இல்லாம எல்லாத்தையும் வெளியில எடுத்து அவனை அழிச்சார்
அப்பொழுது பிரம்மாவால் நிச்சயிக்கப்பட்டு கட்டப்பட்டதுதான் இந்த கோவில்
அவர்தான் கணபதிக்கு அபிஷேகம் பண்ணி பிரதிஷ்டை பண்ணார்
அவர் அபிஷேகம் பண்ண ஜலம்தான் இன்னைக்கு கர்ஹா நதியா அந்த ஊர்ல ஓடிண்டு இருக்கு
அந்த கோவில்ல நாலு கோபுரங்கள் இருக்கு
அங்க இருக்கக்கூடிய நாலு சிலைகள், நாலு புருஷார்த்தமும் இங்க வந்தா கிடைக்கும்னு எடுத்து காட்டுறது
கிழக்கு புறத்துல பால விநாயகர், ராமரோடையும் சீதையோடையும் இருக்கார்
அது தர்மம்
தெற்கு புறத்துல விக்னேஷ்வரர் சிவனோடையும் பார்வதியோடையும் இருக்கார்
அது அர்த்தம்
மேற்கு புறத்துல சிந்தாமணி கணபதி ரதியோடையும் காமதேவனோடையும் இருக்கார்
அது காமம்
வடக்கு கோபுரத்துல மகா கணபதி, வராக சுவாமியோடையும் பூமி தேவியோடையும் இருக்கார்
அது மோக்ஷம்
இப்படி நாலு புருஷார்த்தங்களையும் ஒரு தரிசனத்தினால கொடுக்கக்கூடிய கோவில் இந்த கோவில்
விசேஷமா இங்கே சுவாமி ருத்தியோடையும் சித்தியோடையும் தரிசனம் கொடுத்து அருள் பண்றார்
இப்படிப்பட்ட கணபதியை அந்த க்ஷேத்திரத்துல போய் தரிசனம் பண்ணா இருக்கக்கூடிய கஷ்டங்களும் வரப்போற கஷ்டங்களும் கட்டாயமாக நீங்கும்
மயூரேஷ்வராய நமஹ
Astrology
Bhagavad Gita
Bhagavatam
Bharat Matha
Devi
Devi Mahatmyam
Ganapathy
Garuda Puranam
Glory of Venkatesha
Hanuman
Kathopanishad
Mahabharatam
Mantra Shastra
Mystique
Practical Wisdom
Purana Stories
Radhe Radhe
Ramayana
Rare Topics
Rigveda Explained
Rituals
Sages and Saints
Shiva
Spiritual books
Sri Suktam
Story of Sri Yantra
Temples
Vedas
Vishnu Sahasranama
Yoga Vasishta