தேவி தடாதகாவாக அவதரிக்கிறாள்

0:00 0:00

தேவி தடாதகாவாக அவதரிக்கிறாள்

குரும் கணேசம் கிரிஜாம் பிரணம்ய சிவம் மஹேசம் கருணாகராப்திம் பூதேஷமவ்யక్త சரீரமீஷம் ஹாலாஸ்யநாதம் சரணம் பிரபத்யே

மலையத்வஜன் பாண்டிய குலத்திலேயே தீபமா இருந்தார்

பாண்டிய குலத்துக்கு பூஷணம்

காமதேவன் அளவுக்கு அழகு

இந்திரன மாதிரி சௌரியம்

எல்லா சாஸ்திரங்களிலும் வித்வான்

பெரிய அறிவாளி

தன்னுடைய சரணத்தில் வருவோர்களை பாதுகாப்பவர்

இதுக்கெல்லாம் மேல சுந்தரேஷ்வர் பெருமாளோட பரம பக்தர்

சூரசேன ராஜாவோட புத்தி காஞ்சனமாலை அவரோட தர்மபத்னி

ஆனா கல்யாணமாகி நிறைய வருஷம் போயிட்டும் அந்த தம்பதிக்கு புத்திர பிராப்தி உண்டாகல

ரொம்ப வருத்தமான சூழ்நிலை

நிறைய பூஜைகளும் பரிகாரங்களும் பண்ணா

நிறைய விரதம், உபவாசம் எல்லாம் பண்ணா

கடைசியில தசரதன் பண்ண புத்திரகாமேஷ்டி யாகத்தையே பண்ணா

அந்த யாகத்திலிருந்து மீனாட்சி அம்பாள் ஒரு மூணு வயசு குழந்தையா அவதாரம் எடுத்து வெளியில வந்தா

வெளியில வந்த உடனே காஞ்சனமாலியோட மடியில அம்மான்னு கூப்பிட்டு உட்கார்ந்துண்டா

ஆனா அந்த குழந்தைக்கு மூணு ஸ்தனங்கள் இருந்தது

மலேத்வஜ பூபனுக்கு ஒரே வருத்தம்

கேட்டது புத்திரன, கிடைச்சது புத்திரி

அதுவும் ஒரு துர்லட்சணத்தோடு

ராஜாக்கு ஒரே வருத்தம்

நான் என்னதான் பாவம் பண்ணேனோ, பரமேஸ்வரருக்கு என் மேல எதனால கோபமோ, அந்த சமயத்துல ஒரு ஆகாஷவாணி கேட்டது

மலைத்வஜா கவலையே வேண்டாம்

இது சாக்ஷாத் ஜெகதீஸ்வரி மீனாட்சி அம்பாள்

லோகத்தை பரிபாலிக்கிறதுக்காக அவதாரம் எடுத்திருக்கா

உன்னோட புத்திரியாக, எப்பொழுது தன்னுடைய காந்தனை முதல் தடவை பார்க்கிறாளோ, அப்பொழுது அதிகமா இருக்கக்கூடிய ஸ்தனன் தானாகவே விழுந்து போயிடும்

கவலைப்படாத

இந்த குழந்தைக்கு ஜாதக கர்மாவை பண்ணி தடாதகான்னு நாமகரணமும் பண்ணு

இந்த குழந்தையினால பாண்டிய வம்சத்துக்கு எல்லா விதமான பெருமையும் சௌபாக்கியங்களும் வந்து சேரும்

இந்த அவதாரத்துக்கு ஒரு பூர்வ சரித்திரம் இருக்கு

விஸ்வாவசுன்னு ஒரு கந்தர்வன்

கந்தர்வாளுக்கு நேதா விஸ்வாவசு

அவருக்கு ஒரு புத்தி வித்யாவதி

ரொம்ப நல்லா பாடுவள்

அம்பாள் மேல ரொம்ப பக்தி

சந்தனாதி லேபனங்களுக்கும் ஆபரணங்களுக்கும் பதிலா உடம்புல ருத்ராட்சவும் விபூதியும் தாரணம் பண்ணாள் வித்யாவதி

பூர்ணா தன்னுடைய அப்பாகிட்ட கேட்டாள்

இந்த உலகத்திலேயே பரிபூரண சான்னித்தியம் இருக்கக்கூடிய பார்வதி கோவில் எது? விஸ்வாசு சொன்னார், ஒருக்கா பிரம்மா தராசோட ஒரு தட்டுல காசி, கைலாசம், ஸ்ரீசைலம் கூடிய க்ஷேத்திரங்களையும் மருதட்டுல ஆலாஸ்யமாகிய மதுரை சுந்தரேஷ்வரர் கோவிலையும் வைத்து தூக்கி பார்த்தாராம்

ஆலா சேர்ந்த தட்டு கீழே போச்சாம்

அப்படிப்பட்ட மதுரை க்ஷேத்திரத்தில ஒர்த்தாமர குளத்தோட தீரத்தில அருள் புரிந்து கொண்டிருக்கும் மீனாட்சி அம்பாள் கோவில்தான் கோவில்களிலேயே மட்டுமல்ல

சமஷ்ட லோகத்திலேயே அம்பாள் சாநித்யம் அதிகமா உள்ள இடம்

மோக்ஷ பிராப்திக்கு இதுக்கு மேல ஒரு இடம் இல்ல

இதை தொடர்ந்து அப்பாவோட அனுமதி வாங்கி வித்யாவதி ஒரு மகர சங்கிரமணத்துக்கு மதுரைக்கு வந்து சேர்ந்தா

சம்பத்சர விரதம் ஆரம்பிச்சா

ஒரு வருஷம் தினமும் அம்பாளுக்கு 108 கோடம் அபிஷேகம்

1008 நீல கமலத்தினால அர்ச்சனை

முதல் முதல்ல நித்திய ஒரு நேரம் சாப்பாடு

போக போக அதுவும் இல்ல

ஒரு நாளைக்கு பொருத்தாமர குளத்துல ஸ்நானம் பண்ணி அம்பாள் தரிசனம் பண்ணிட்டு இருந்த வித்யாவதிக்கு மீனாட்சி அம்பாள் ஒரு மூணு வயசு குழந்தையா பிரத்யக்ஷமானாள்

மஞ்ச பட்டு பாவாடை அணுந்திருந்தாள் அம்பாள்

உனக்கு என்ன வரம் வேணும் கேட்டா

வித்யாவதி அம்பாளோட பாதத்திலே அசஞ்சலமான பக்தியை வரமா கேட்டாள்

அப்புறம் இதே ரூபத்திலே அம்பாள் தன்னுடைய குழந்தையா பொறக்கணும் அப்படின்னு பிரார்த்திச்சாள்

அம்பாள் சொன்னா, வரக்கூடிய ஜென்மத்துல நீ பாண்டிய பூவனாகிய மலைத்வஜனோட மனைவி ஆவாய்

தற்பொழுது உத்திரகாமேஷ்டி பண்ணும்போது யாகாக்னியிலிருந்து நான் உத்பவமாகி உன்னோட குழந்தையா உன் கூடயே இருக்கிறேன்

உங்களோட அபீஷ்டத்தை எல்லாம் சாதிச்சு கொடுத்து கடைசியில மோக்ஷத்தையும் கொடுக்கிறேன்

அடுத்த ஜென்மத்துல வித்யாவதி காஞ்சன மாலையா பொறந்தா

அம்பாள் காஞ்சன மாலையோட புத்திரியா யாகாக்னியிலிருந்து அவதாரம் எடுத்தாள்

மலைத்வஜன் தடாதகைய புத்திரியா இல்ல புத்திரனாகவே வளர்த்தினார்

தனுர்வேதத்தையும் யுத்த கலகலையும் கத்துக்கொடுத்தார்

தடாதகைய ராஜ்யாபிஷேகம் பண்ணி பாண்டிய தேசத்துக்கு அதிபயா வாழ வச்சு உயிரிறந்தார் மலையத்வதன்

தடாதகை எல்லா சத்துர்களையும் ஜெயிச்சு புகழ் பெற்று பிரஜா பரிபாலனம் பண்ணினார்

ஹாலாஸ்யநாதாய நமஹ

 

  • வித்யாவதி தேவி மோக்ஷ சாதனத்திற்காகப் பல க்ஷேத்திரங்கள் இருக்க, மதுரையைத் தேர்ந்தெடுத்ததன் பின்னணியில் உள்ள அதீத ரகசியம் யாது?
    பிரம்மதேவன் உலகிலுள்ள சகல புண்ணிய தீர்த்தங்களையும் க்ஷேத்திரங்களையும் தராசின் ஒரு தட்டிலும், மதுரையை மறு தட்டிலும் வைத்து நிறுக்கையில், மதுரையே கனம் பெற்றிருந்தது. காசி, கைலாசம் முதலான இடங்களை விடவும் மதுரையில் அம்பிகையின் சாந்நித்தியம் பரிபூரணமாக இருப்பதை உணர்ந்தே வித்யாவதி இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்தாள். இது மதுரையை முக்தி தரும் தலங்களில் முதன்மையானது என்பதை உணர்த்துகிறது.
  • மலையத்வஜ பாண்டியன் புத்திர காமேஷ்டி யாகம் செய்தும், மகளாக மீனாட்சி தோன்றியதன் தாத்பர்யம் என்ன?
    மலையத்வஜன் ஆண் வாரிசை விரும்பிய போதிலும், பாண்டிய வம்சம் இறைவியின் நேரடி ஆளுகைக்கு உட்பட்டது என்பதை நிலைநாட்டவே அம்பிகை தோன்றினாள். புத்திரனாக அல்லாமல் புத்திரியாகத் தோன்றினாலும், அவள் ஒரு வீர மகனாகவே வளர்க்கப்பட்டு, பெண்மையின் ஆற்றலையும் வீரத்தையும் உலகிற்குப் பறைசாற்றியது இதன் மறைபொருள்.
  • தடாதகை பிராட்டியின் உடலில் மூன்று ஸ்தனங்கள் இருந்ததன் பின்னணியில் உள்ள தெய்வீகத் திட்டம் யாது?
    இது ஒரு துர்லட்சணம் அல்ல; மாறாக அவளுடைய காந்தனை (மணாளனை) அடையாளம் காட்டும் ஒரு தெய்வீகக் குறியீடு. அவளது மூன்று ஸ்தனங்கள் என்பவை இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகியவற்றின் உருவகம். அவளது நாயகனாகிய சிவபெருமானைக் காணும்போது தேவையற்ற ஒரு சக்தி (ஸ்தனம்) மறைந்து, அவள் இல்லற தர்மத்திற்குத் தயாராவதை இது குறிக்கிறது.
  • வித்யாவதி தேவி செய்த வழிபாட்டு முறைகளில் மறைந்துள்ள ஆன்மிகச் செய்தி என்ன?
    அவள் ஆபரணங்களைத் துறந்து விபூதியையும் ருத்ராட்சத்தையும் அணிந்தாள். இது புற அழகை விட அகத்தூய்மையே இறைவனைக் கவரும் என்பதை உணர்த்துகிறது. மேலும், ஒரு வருடம் நீல கமல மலர்களால் அர்ச்சனை செய்ததும், உணவைத் துறந்து தவம் செய்ததும், லட்சியத்தில் உறுதியாய் இருப்பவர்களுக்குத் தெய்வம் குழந்தையாகவே வரும் என்பதை மெய்ப்பிக்கிறது.
  • ஆகாஷவாணி மலையத்வஜ மன்னனிடம் தடாதகைக்கு ஜாதக கர்மா செய்யச் சொன்னதன் அவசியம் என்ன?
    அம்பிகை யாகத் தீயிலிருந்து தோன்றியவள் என்றாலும், அவள் மானுட வடிவம் ஏற்று வந்ததாலும், பாண்டிய குலத்தின் வாரிசாக அங்கீகரிக்கப்பட வேண்டியதாலும், சாஸ்திர ரீதியான சடங்குகள் அவசியமாயின. இது இறைவியே ஆனாலும் உலக நியதிக்குக் கட்டுப்பட்டு நடப்பார் என்பதைக் காட்டுகிறது.
  • மீனாட்சி அம்மனின் அவதாரம் காஞ்சனமாலைக்குக் கொடுத்த வாக்குறுதி எவ்வாறு நிறைவேறியது?
    முற்பிறவியில் வித்யாவதியாக இருந்தபோது அவள் கேட்ட வரம், அம்பிகை தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்பது. அந்தத் தவப்பயனாலேயே காஞ்சனமாலைக்கு அம்பிகை யாகத் தீயிலிருந்து நேராகத் தோன்றி, அவள் மடியில் அமர்ந்து அம்மா என்று அழைத்தாள். இது பக்தியின் வலிமை காலங்களைக் கடந்தும் பலன் தரும் என்பதற்குச் சான்று.
  • மலையத்வஜ பாண்டியன் தடாதகையை வளர்த்த விதம் ஏனைய இளவரசிகளிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
    பாண்டிய மன்னன் அவளை மென்மையான பெண்ணாக வளர்க்காமல், ஒரு சக்கரவர்த்தியாக வளர்த்தார். தனுர்வேதம் எனப்படும் வில்வித்தை மற்றும் சகல யுத்த கலைகளையும் அவளுக்குக் கற்பித்தார். இது அம்பிகை மதுரையை ஆளப்போகும் வீர நாயகி என்பதற்கான முன்னோடியாகும்.
  • தடாதகை எனும் திருநாமத்தின் உட்பொருள் யாது?
    தடாதகை என்பதற்கு அசைக்க முடியாதவள் அல்லது தடைகளைத் தகர்ப்பவள் என்று பொருள் கொள்ளலாம். ஜாதக கர்மாவின் போது சூட்டப்பட்ட இப்பெயர், அவள் திக்விஜயம் செய்து எண்திசைகளையும் வென்று, முடிவில் ஈசனையே அடையும் வலிமை கொண்டவள் என்பதைக் குறிக்கிறது.
  • வித்யாவதியின் பிரார்த்தனையில் விசேஷமாகக் கருதப்படுவது எது?
    அவள் அம்பாளிடம் வேண்டியது மோக்ஷத்தை மட்டுமல்ல, அம்பாளின் பாதங்களில் அசஞ்சலமான அதாவது எதற்கும் கலங்காத நிலையான பக்தியை மட்டுமே. உண்மையான பக்தன் இறைவனையே மகனாகவோ மகளாகவோ அடைய விரும்புவான் என்ற உன்னத நிலையை வித்யாவதியின் சரித்திரம் காட்டுகிறது.
  • மலையத்வஜன் மறைவுக்குப் பின் தடாதகையின் ஆட்சி எவ்வாறு அமைந்தது?
    தந்தையின் மறைவுக்குப் பின் தடாதகை பாண்டிய தேசத்தின் அதிபதியாக முடிசூடினாள். அவள் தன் வீரத்தால் பகைவர்களை வென்று, நீதியும் தர்மமும் நிலைபெறப் பிரஜைகளைப் பரிபாலனம் செய்தாள். ஒரு தெய்வமே மன்னராக வந்து ஆட்சி புரிந்ததால், அந்த நாடு சகல சௌபாக்கியங்களையும் பெற்றுத் திகழ்ந்தது என்பது வரலாறு.
தமிழ்

தமிழ்

திருவிளையாடல்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies