சுந்தரேஸ்வரப் பெருமாள் சோழ அரசனுக்கு தர்சனம் கொடுக்கிறார்

0:00 0:00

சுந்தரேஸ்வரப் பெருமாள் சோழ அரசனுக்கு தர்சனம் கொடுக்கிறார்

 ஒரு சோழ அரசனுக்கு காந்தார சேதி அப்படின்னு ஒரு பேரு

அது என்னன்னா காஞ்சி காமாட்சி கோவில்ல ஜீரணோத்தாரம் பண்றதுக்காக அவர் அது பக்கத்துல இருந்த காந்தாரத்தை, காந்தாரம்னா மகாவனம்

அதையெல்லாம் சேதிச்சார்

வெட்டினார்

அதனால காந்தார செய்தி

அவரும் சிவபெருமாளோட பெரிய பக்தர்

அரசர்கள் சந்தனம், குங்குமம், ஆபரணங்கள் அதெல்லாம்தான் தாரணம் பண்ணுவார்

ஆனா இவர் அதையெல்லாம் விட்டு பஸ்மம், ருத்ராட்சம் இதையெல்லாம் தரிக்க ஆரம்பிச்சார்

ஒருக்கா காமாட்சி அம்பாள் தரிசனம் பண்ண வந்த சில மகாத்மாக்கள் சோழ அரசன்கிட்ட ஹாலாசியமாகிய மதுரை மீனாட்சி கோவிலோடையும் பொருத்தாமர குலத்தோடையும் மகிமையை பத்தி சொன்னா

அது கேட்டதும், சோழ அரசனுக்கு சுந்தரீஸ்வர பெருமாளை தரிசனம் பண்ணனும்னு ரொம்ப ஆசையாச்சு

ஆனா பாண்டிய அரசன் சோழ அரசனுக்கு சத்ரு

இது எப்படி நடக்கும்? சுந்தரீஸ்வர பெருமாள் காந்தார செய்தியோட கனவுல வந்தார்

நீ தனியா வந்து என்ன தரிசனம் பண்ணலாம்

ஒரு ஆபத்தும் வராத நான் பாத்துக்குறேன்

சோழ அரசன் மார்வேஷத்துல வேகவதியோட அந்த கரையில வந்தார்

ஆனா நதியில ஒரே வெள்ளம்

ரொம்ப வருத்தப்பட்டார்

என்ன பண்றது? இந்த நதியை எப்படி தாண்டுறது? ராத்திரி ஆச்சு

இங்கே சுந்தரேஷ்வர பெருமாள் கோவில்ல வாசல்களும் கோபுரங்களும் எல்லாம் மூடப்பட்டது

தன்னுடைய பக்தன் சோழ பூபன் நதிக்கரையில வந்திருக்கார் என்று சுந்தரேஷ்வர் பெருமாள் ஒரு சித்தர் வேஷத்திலே அங்க போய் நதியை தாண்ட வச்சு அரசனை அழைச்சுண்டு வந்தார்

கோவிலுக்குள்ள ஒரே இருட்டு

அரசனுக்கு இருட்டுலையும் கண்ணு தெரியுற மாதிரி திவ்ய திருஷ்டியையும் கொடுத்தார்

மீனாட்சி அம்பாளோடையும் ஹாலாஸ்யநாதரோடையும் தரிசனம் கிடைச்சு

சோழ அரசன் ஆனந்தத்தை அடைஞ்சார்

அதுக்கப்புறம் சித்தர் அரசனை நதிக்கரையில கொண்டு போய் திருப்பி தாண்ட வச்சார்

ஆனா என்ன ஆச்சுன்னா பெருமாளுக்கு தன்னுடைய மகிமையை பக்தர்களுக்கு தெரிய வைக்கணுமே

கோவில் மூடினபோது காவலாளிகள் மீன முத்திரை போட்டு வாசலை மூடி இருந்தா

சுந்தரேஸ்வர பெருமாள் அதையெல்லாம் தொறந்து அரசனை உள்ள கொண்டு வந்தாரே

திருப்பி மீன முத்திரைக்கு பதிலா விருஷப முத்திரையை வச்சு வாசலை மூடினார்

கார்த்தால வாசலை தொறக்க வந்தவா பார்த்தபொழுது, முத்திரை மாறி இருக்கு

அவா பாண்டியரசனை தெரிய வச்சா ஏதோ நடந்திருக்கு

சுந்தரேஸ்வரர் பெருமாளுக்கு மட்டும்தான் இது தெரியும் என்ன நடந்திருக்கு என்று

திருட்டு எதுவும் நடக்கல

பாண்டியரசன் அப்படியே பட்டினி இருந்து பெருமாள் சந்நிதியில படுத்துண்டார்

இதுக்கு பதில் கிடைக்கிறது வரைக்கும் சந்நிதியை விட்டு நகர மாட்டேன்

கொஞ்ச நேரத்துல ஆகாஷவாணி கேட்டது கர்ப்ப கிரகத்திலிருந்து

சுந்தரேஸ்வர பெருமாள் நடந்ததையெல்லாம் சொன்னார்

எல்லாருக்கும் ஆச்சரியமாச்சு

சத்ருவாகிய சோழ அரசனுக்கு எப்படி சுந்தரேஸ்வர பெருமாள் அனுக்கிரகம் பண்ணி இருக்கார் பாருங்கோ

பெருமாளுக்கு அப்படி சத்ரு மித்திர பாவம் கிடையாது இல்லையா? எல்லா பக்தர்களும் அவருக்கு சமம்தான்

இங்கே நம்ம ஹாலாஸ்யநாதர் சொல்றோமே, ஹாலாஸ்யம் என்றால் ஆலவாய்

ஆலவாய் ஹாலாஸ்யம் மதுரை

இந்த ஹாலாஸ்ய மஹாத்மியத்துக்கு மூல கிரந்தம்

திருவிளையாடல் புராணம், பரம்ஜோதி மினுவர் எழுதின திருவிளையாடல் புராணம்

நீலகண்ட தீக்ஷிதர் இதை சம்ஸ்கிருதத்திலேயும் மொழிமாற்றம் பண்ணி இருக்கார்

சிவலீலாமிருதம்னு அதுக்கு பேரு

ஹாலாஸ்யநாதாய நமஹ

 

  • சோழ மன்னனுக்கு காந்தார சேதி என்ற திருநாமம் எதனால் ஏற்பட்டது?
    காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தைப் புதுப்பிக்கும் நற்பணிக்காக, அந்த ஆலயத்தைச் சூழ்ந்திருந்த காந்தாரம் எனப்படும் அடர்ந்த மகா வனத்தைச் சேதித்து அப்புறப்படுத்தியதால் அவருக்கு காந்தார சேதி என்ற பெயர் உண்டானது.
  • அரச போகங்களைத் துறந்து அந்தச் சோழ மன்னன் எத்தகைய கோலத்தைப் பூண்டார்?
    பொதுவாக அரசர்கள் சந்தனம், குங்குமம் மற்றும் நவமணி ஆபரணங்களையே அணிவர். ஆனால் இம்மன்னனோ அவை அனைத்தையும் விடுத்து, சிவபெருமான் மீதான பற்றினால் திருநீற்றையும் ருத்ராட்சத்தையும் நித்திய ஆபரணங்களாகத் தரித்துக் கொண்டார்.
  • மதுரை மீனாட்சி சொக்கநாதப் பெருமானைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆர்வம் சோழ மன்னனுக்கு எவ்வாறு பிறந்தது?
    காஞ்சி காமாட்சி அம்மனைத் தரிசிக்க வந்த மகாத்மாக்கள், மதுரையின் பெருமையையும், பொற்றாமரைக்குளத்தின் மகிமையையும், ஹாலாஸ்யநாதரின் லீலைகளையும் அரசனிடம் எடுத்துரைத்தனர். அதனைக் கேட்ட மாத்திரத்திலேயே அவருக்குத் தரிசன ஆவல் மேலோங்கியது.
  • பகையரசரான பாண்டியனின் தேசத்திற்குள் சென்று தரிசிப்பது சாத்தியமற்றதாக இருந்தபோது, சிவபெருமான் அளித்த அபயம் யாது?
    பாண்டியன் சோழருக்குப் பகைவனாக இருந்தபோதும், சிவபெருமான் சோழ மன்னரின் கனவில் தோன்றி, எவ்வித அச்சமுமின்றித் தனித்து வருமாறு பணித்தார். தமக்குரிய பக்தனைத் தாம் காப்பதாக இறைவன் உறுதி அளித்தார்.
  • வேகவதி ஆற்றின் வெள்ளப் பெருக்கைச் சோழ மன்னன் எவ்வாறு கடந்தார்?
    நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதைக் கண்டு திகைத்த மன்னருக்காக, மதுரையை ஆளும் சொக்கநாதப் பெருமானே ஒரு சித்தர் வேடம் பூண்டு வந்து, அந்த வெள்ளத்தைக் கடக்கச் செய்து அவரை அக்கரைக்கு அழைத்துச் சென்றார்.
  • மூடியிருந்த ஆலயத்திற்குள் இருளிலும் இறைவனைத் தரிசிக்க மன்னருக்கு எத்தகைய ஆற்றல் வழங்கப்பட்டது?
    நள்ளிரவில் ஆலயத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையிலும், சித்தர் உருவில் வந்த இறைவன் மறைமுகமாக உட்புகச் செய்து, இருளிலும் இறைவனைக் காணும் திவ்ய திருஷ்டி எனப்படும் ஞானக் கண்ணைச் சோழ மன்னனுக்கு அருளினார்.
  • இறைவன் நிகழ்த்திய அந்த ரகசியத் திருவிளையாடல் மறுநாள் பாண்டிய மன்னனுக்கு எவ்வாறு தெரிய வந்தது?
    பாண்டிய மன்னனின் முத்திரையான மீன முத்திரையிட்டு மூடப்பட்டிருந்த கதவுகளில், மறுநாள் காலையில் இறைவனின் திருவிளையாடலால் நந்தி முத்திரை (விருஷப முத்திரை) இருப்பதைக் கண்டு யாவரும் வியப்புற்றனர். இதன் மூலம் ஏதோ ஒரு தெய்வீக மாற்றம் நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டது.
  • முத்திரை மாறிய மர்மத்தை அறிய பாண்டிய மன்னன் மேற்கொண்ட உறுதிப்பாடு என்ன?
    தனது ஆலயத்தில் நிகழ்ந்த இந்த அதிசயத்தின் பின்னணியைத் தெரிந்து கொள்ளாமல் அவ்விடத்தை விட்டு நகர மாட்டேன் என்று உறுதி பூண்டு, பாண்டிய மன்னன் உண்ணாநோன்பு இருந்து இறைவன் சந்நிதியிலேயே வீழ்ந்து கிடந்தார்.
  • இறைவன் காந்தார சேதிக்கு அருள் புரிந்ததன் மூலம் உணர்த்தும் அடிப்படைத் தத்துவம் என்ன?
    உலகியல் ரீதியாக அரசர்களுக்கு இடையே பகை இருக்கலாம். ஆனால் இறைவனைப் பொறுத்தவரை சத்ரு மித்ர பாவம் எனப்படும் நண்பன் எதிரி என்ற வேறுபாடு கிடையாது. உண்மையான பக்திக்கு இறைவன் எந்நாடும் எக்காலமும் கடந்து அருள்பாலிப்பார் என்பதே இதன் தத்துவம்.
  • ஹாலாஸ்ய மஹாத்மியத்தின் முக்கிய நூல்கள் யாவை?
    மதுரையின் பெருமையைக் கூறும் மூல நூல் திருவிளையாடல் புராணம் ஆகும். இது பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பட்டது. இதையே நீலகண்ட தீட்சிதர் என்பவர் சிவலீலாமிருதம் என்ற பெயரில் வடமொழியில் மொழிபெயர்த்து அருளியுள்ளார்.
தமிழ்

தமிழ்

திருவிளையாடல்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies