![]()
நராந்தகன் முன்னிலையில அஸ்திரங்களோடும், மதம் பிடிச்ச யானைகளோடும், வேகமா ஓடி ஆக்கிரமிக்கிற குதிரைகளோடும் அசுரசேனை காஷிக்கு கிளம்பியது
அசுராளுக்கு பிரேரணமாக க்ரூர சப்தங்கள் உள்ள வாத்தியங்கள் வாசிக்கப்பட்டிருந்தது
அந்த சப்தத்தால பூகம்பம் வந்த போல காசி நடுங்க ஆரம்பிச்சது
ஒரு காவலாளி காசிராஜா கிட்ட வந்து சொன்னேன்
காசிய ஆக்கிரமிக்க நராந்தகன் சேனையோட பூர்வத்திலிருந்து வந்துண்டு இருக்கான்
ராஜா தன்னோட சேனைகிட்ட சொன்னார், சஸ்திரமும் கவசமும் எடுத்துண்டு பூர்வத்துல போய் அவால தடுத்து நிறுத்துங்கோ
ராஜா மஹோத்கடன் கிட்ட சொன்னார்
காஷிக்கு ஒரு பெரிய துரிதம் வரப்போறது
அதிலிருந்து காஷியை நீங்க காப்பாத்துங்க
ராஜா பார்த்தபோது அலை வேகமாக வருவது போல அசுரா கூட்டமாக வந்துண்டு இருந்தா
நகரத்துக்குள்ள வரும்போது ஒவ்வொரு வீடா தீ வைப்பா
உள்ள இருக்கிறவால்லாம் அந்த தீக்கு பயந்து வெளியில வரும்போது அவாள கொன்னுடுவா
இப்படி பண்ணிட்டு இருந்தா அசுரா
பெண்கள், குழந்தைகள் யாரா இருந்தாலும் கொஞ்சம் கூட தய பார்க்காம அவாளை கொன்னுடுவா
ராஜாவுக்கு இது பார்த்து மிகவும் கோவம் வந்தது
அவர் வேகமா சஸ்திரங்கள் எல்லாம் எடுத்துண்டு போய் அசுர சேனையை அடிச்சு விழுத்த ஆரம்பிச்சார்
நராந்தகனால இத நம்ப முடியல
ஒரு காலத்துல தனக்கு அடிமையா வந்த ராஜா இப்போது தன்னோட சின்ன சேனையை வச்சுண்டு என்னோட பெரிய சேனையை எதிர்த்துண்டு வந்திருக்கார்
அசுர சைனிகாலுக்கு காசிராஜா அவாள கொல்ல வந்த யமனை மாதிரி தெரிஞ்சார்
ஆனா அசுரர்கள் நினைச்சார்கள்
காசிராஜாக்கு பயந்து பின்னாடி போனா நராந்தகனை நம்மளை எரிச்சு கொன்னுடுவான்
என்ன செய்யறது? காசிராஜாவை எதிர்த்து போகிறதா? நராந்தகனை எதிர்த்து போகிறதா? இது புரியாம தவிச்சுண்டு இருந்தார்கள் அசுரர்கள்
காஷிராஜா நராந்தகனோட முக்காவாசி சேனையை அழிச்சுட்டார்
நராந்தகன் கொஞ்சம் அசுராளுக்கு காஷிராஜாவோட சைனிகால மாதிரி வேஷத்தை போட்டு அனுப்பி வச்சான்
அவா போய் ஆயுதங்களால காஷிராஜாவ மிரட்டி பிடிச்சா
நராந்தகம் கிட்ட கொண்டு வந்து ஒப்படிச்சா
காஷிராஜா பிடிபட்டு விட்டார்
காசிராஜாவோட சேனையில இருந்தவா எல்லாம் வருத்தத்தோட திரும்பி போனா
ஜெயிச்ச சந்தோஷத்துல வாத்தியங்களை வாசிக்க ஆரம்பிச்சார்கள் அசுரர்கள்
நராந்தகன் காசியிலயும் பரணம் பண்ணலாம் அப்படின்னு நினைச்சுண்டு அரண்மனைக்குள்ள பிரவேஷிக்க முயற்சி செய்தான்
காசியை காப்பாத்துறதுக்கு இருந்த ஒரே உபாயம் மஹோத்கட்டம் தான்
சில சைனிகா நினைச்சா நம்ம இப்போதைக்கு அசுரர்கள் சரணத்துல போய் உயிர் பிழைக்கலாம்
மீதி இருக்கிற சைனிகா ஒரு நேரத்துல மஹோத்கடன் நம்மளையும் காசியையும் காப்பாத்துவார் அப்படின்னு நம்பிக்கையோட வேண்டிக்கொண்டிருந்தார்கள்
ஸ்ரீ கணேஷாய நமஹ
Astrology
Bhagavad Gita
Bhagavatam
Bharat Matha
Devi
Devi Mahatmyam
Ganapathy
Garuda Puranam
Glory of Venkatesha
Hanuman
Kathopanishad
Mahabharatam
Mantra Shastra
Mystique
Practical Wisdom
Purana Stories
Radhe Radhe
Ramayana
Rare Topics
Rigveda Explained
Rituals
Sages and Saints
Shiva
Spiritual books
Sri Suktam
Story of Sri Yantra
Temples
Vedas
Vishnu Sahasranama
Yoga Vasishta