கம்சனால் கொல்லப்பட்ட தேவகியின் ஆறு மகன்கள் முந்தைய வாழ்க்கையில் யார்?

தெய்வீகம், கர்மம், மறுபிறப்பு ஆகியவற்றை இழைந்திணைக்கும் கதைகள் நம் வேதங்களில் நிரம்பியுள்ளன. இவற்றில், கம்சனால் கொல்லப்பட்ட தேவகியின் ஆறு மகன்களின் கதை, அதன் ஆழ்ந்த கர்மவினைத்  தாக்கங்கள் காரணமாக தனித்து நிற்கிறது. ஷட்கர்பர்கள் என்று அழைக்கப்படும் இந்த ஆறு மகன்களும் ஒரு குறிப்பிடத்தக்க கர்மவினை தாக்கத்தைக் கொண்டிருந்தனர், இது அவர்களின் சோகமான மரணங்களுக்கும் இறுதியில் விடுதலைக்கும் வழிவகுத்தது. இந்தக் கட்டுரை அவர்களின் முந்தைய சிக்கல் நிறைந்த வாழ்க்கையின் விவரிப்பு, அவர்கள் சந்தித்த சாபங்கள், இறுதியில் அவர்களை விடுவித்த தெய்வீக தலையீடு ஆகியவற்றை ஆராய்கிறது. 

ஷட்கர்பர்கள் யார்?

இந்த கல்பத்தின் முதல் மன்வந்தரமான ஸ்வாயம்புவ​ மன்வந்தரத்தைச் சேர்ந்த ஆறு புகழ்பெற்ற முனிவர்கள் ஷட்கர்பர்கள் என்பவர்கள். அவர்கள் பிரம்மாவின் பத்து மானசபுத்திரர்களில் (மனதில் பிறந்த குமாரர்கள்) ஒருவரான மரீசியின் குமாரர்களாக இருந்தனர். அவர்களின் ஞானம் மற்றும் புலமைக்காக அறியப்பட்ட அவர்களின் கதை. பிரம்மாவை ஒரு கணம் அவமதித்தன்  காரணமாக ஒரு சோகமான திருப்பத்தை எடுத்தது.

பிரம்மாவின் சாபம்

ஒரு நாள், பெரும்பாலான நூல்களில் குறிப்பிடப்படாத காரணங்களுக்காக, ஷட்கர்பர்கள் படைப்பாளரான பிரம்மாவைப் பார்த்து சிரித்தனர். இந்த அவமரியாதைச் செயல், காலனேமி என்ற அசுரனின்  மகன்களாக மறுபிறவி எடுக்கும்படி அவர்களைச் சபிக்க, பிரம்மாவை கோபப்படுத்தியது.

அசுரர்களில் இருந்து தபஸ்விகளாக மாறுதல்

சக்திவாய்ந்த அரக்க மன்னரான ஹிரண்யகஶிபுவின் மகன்களாக ஷட்கர்பர்கள் மீண்டும் மறுபிறவி எடுத்தனர். அவர்களின் பிறப்பு அசுரத்தனமாக இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் தெய்வீகத் தன்மையை  மறக்காமல், சாபத்தை நீக்க பிரம்மாவைச் சாந்தப்படுத்த முயன்றனர். அவர்களின் தவம் பிரம்மாவை மகிழ்வித்தது, பிரம்மா அவர்களுக்கு அழியாத வரத்தை வழங்கினார். அவர்களை தேவர்களாலும்  காந்தர்வர்களாலும் மற்றும் பிற அசுரர்களாலும் வெல்லமுடியாத அளவுக்கு மாற்றினார்.

ஹிரண்யகஶிபுவின் சாபம் - ஒரு பிதாவின் கோபம்

ஹிரண்யகஶிபு தனது மகன்கள் பிரம்மாவின் ஆசீர்வாதத்தை நாடியதைக் கண்டபோது, அவர் கோபமடைந்தார். பிரம்மாவையும் தேவர்களையும் எதிரிகளாகக் கருதி, அவர் தனது மகன்களைப் பாதாளத்திற்கு துரத்திவிடவும், நூறாயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்கு தூங்கவும் சபித்தார்.

கம்சனாக மீண்டும் பிறந்த காலநேமியின் பங்கு

 பிற்கால வாழ்க்கையில், கம்சனாக மதுராவின் கொடுங்கோன்மையான ஆட்சியாளரானார்.  தெய்வத்தின் திட்டப்படி, ஷட்கர்பர்கள் தேவகி மற்றும் வசுதேவரின் மகன்களாக மறுபிறவி எடுக்க வேண்டும், மற்றும் முந்தைய வாழ்க்கையில் அவர்களின் முன்னாள் தந்தையான கம்சனால் கொல்லப்பட வேண்டும்.

தெய்வத்தின் திட்டமும் நாரதரின் பங்கும்

பல கட்டுக்கதைகளில் தனது முக்கியம் வாய்ந்த பாத்திரத்திற்காக அறியப்பட்ட நாரதர், ஷட்கர்பர்களின் சாபம் நீக்கப்பட்டதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்தார். தேவகியின் முதல் ஆறு மகன்களின் பிறப்பைப் பற்றி கம்சன் ஆரம்பத்தில் அலட்சியமாக இருந்தபோது, நாரதர் அந்த அறுவரையும் கொல்லத் தூண்டினார். இந்தச் செயல் தீமைக்கு துணை போகாத செயல். ஏனெனில் ஷட்கர்பர்களை அவர்களின் சாபத்திலிருந்து விடுவிக்கும் நோக்கத்தைக் கொண்டது.

கர்ம விமோசனம்

ஷட்கர்பர்களளின் பிறப்பு மற்றும் இறப்பு, அவர்களைச் சுற்றியுள்ள நிகழ்வுகள், கர்மம் மற்றும் தெய்வ சித்தமும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதற்கான சான்றாகும். ஒவ்வொரு செயலும், சாபமும், மறுபிறப்பும் ஒரு பெரிய பிரபஞ்ச நோக்கத்திற்கு உதவியது, தனிமையில் பார்க்கும்போது பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.

தமிழ்

தமிழ்

கிருஷ்ணர்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies