![]()
சோமவார விரதம் ரொம்ப விசேஷம்
மதுரையில அனுஷ்டிச்சா அதுலயும் ரொம்ப விசேஷம்
பலவிதமா சோமவார விரதம் பண்ணலாம்
ஒரு நேர ஆஹாரம்
இது ராத்திரியிலேனா இன்னும் விசேஷம்
ஒரு நாள் முழுசா திங்கட்கிழமை கார்த்தால இருந்து சுவ்வாய்க்கிழமை கார்த்தால வரைக்கும் ஆகாரம் இல்லாம இருந்தா இன்னும் விசேஷம்
ஒரு நேரம் மட்டும் ஆகாரம் பண்ணி ராத்திரி தூங்காம இருந்தா அதுவும் விசேஷம்
௨௪ மணி நேரம் ஆகாரம் தூக்கம் இல்லாம சோமவார விரதம் பண்றது உத்தமோத்தமம்
சோமவார விரதம் ஆரம்பிக்கிறது கார்த்திகை மாசத்திலேயோ தை மாசத்திலேயோ இருந்தா ரொம்ப நல்லது
சோமன், சோமஹா, ச உமஹா, உமையோடு சேர்ந்திருக்கிறவன் சோமன்
திங்கட்கிழமை காத்தால எழுந்திருந்து சுந்தரீஸ்வர பெருமாளையும் மீனாட்சி அம்பாளையும் ஸ்மரணம் பண்ணி முதல் முதலாக ஞான தீர்த்தத்துல விதிவத்தா ஸ்நானம் பண்ணனும்
அதுக்கப்புறம் சுப்ர வஸ்திரத்தை கட்டிக்கணும்
சிவலிங்கத்துல பூஜை பண்ணனும்
சரியான பூஜா விதி தெரியலைன்னா தெரிஞ்ச ஆள வச்சு பண்ண வைக்கணும்
மத்தியானம் ஒருவேளை சாப்பிட்டு ராத்திரி ஒருக்கையில் இருந்தா மத்தியானத்துக்கு முன்னாடி பூஜை பண்ணனும்
ராத்திரி சாப்பிடாத இருக்கிறவாளும் முழுநாள் பட்டினியா இருக்கிறவாளும் ராத்திரி பூஜை பண்ணனும்
சோமவார விரத பூஜையில வெள்ளை புஷ்பங்கள் பிரதானம்
ஆனா ரொம்ப பிரதானம் வில்வம்
ஓம் நமச்சிவாய என்கிற பஞ்சாட்சர மந்திரத்தினால வில்வ பத்திரத்தினால பூஜை பண்ணனும்
அஞ்சு மகா பாதகங்கள் பண்ணுனவாளுக்கு கூட அதிலிருந்து முக்தி கிடைக்கும்
வில்வம் ரொம்ப சக்தி உள்ளது
வில்வத்தை பார்க்கிறது, தொடுறது, கும்பிடுறது இதெல்லாம் பண்ணுனா அந்த நாள் பண்ண பாவம் முழுவதும் நசிக்கும்
மரண காலத்துல யாரு வில்வ மூலத்துல இருக்கக்கூடிய மண்ணெடுத்து விபூதி மாதிரி இட்டுக்கிறாளோ, அவாளுக்கு சிவ சாயுஜ்யம் கிடைக்கும்
சோமவார விரதத்தின் போது தியானிக்க வேண்டிய சிவ சொரூபம் சிவனும் பார்வதியும் சேர்ந்தது
மகாதேவரை, கோடி சூரிய பிரகாசத்தோடையும், கோடி சந்திரனோட குளிர்ச்சியோடையும் ஒரே சமயத்துல இருக்கிறதாக நினைக்கணும்
சுவாமிக்கு அஞ்சு முகம்
அந்த அஞ்சு முகத்திலேயும் சேர்ந்து ௧௫ கண்ணு
பத்து கை
அந்த பத்து கைகள்ல சூலம், பரசு, வாள், வஜ்ராயுதம், அபயமுத்ரை, பாஷம், நாகம், அங்குஷம், மணி, அக்னி
திவ்யமான வஸ்திரங்கள்
சர்ப்பத்தையே யக்ஞோபவீதமா போட்டுண்டு இருக்கார்
நெற்றியில சந்திரக்கலை
கிரீடம், குண்டலம், ஹாரங்கள்
இதெல்லாம் சேர்ந்து கௌரி சமேதனா இருக்கிறதாக தியானம் பண்ணோம்
பூஜையில அப்பம், வடை, பாயசம், பழம் எல்லாம் நைவேத்தியம் பண்ணலாம்
பூஜை பண்ணி சுவாமிகிட்டயும் அம்பாள் கிட்டயும் இருக்கக்கூடிய அபேஷங்கள் எல்லாம் பிரார்த்திக்கணும்
சோமவார விரதம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அதோட காலாவதியை முடிவு பண்ணனும்
ஒரு வருஷம், ரெண்டு வருஷம், மூணு வருஷம், 12 வருஷம் இல்லைன்னா ஜீவன் இருக்கிற வரைக்கும்
ஒரு வருஷம், ரெண்டு வருஷம், மூணு வருஷம் இல்லைன்னா ௧௨ வருஷம் பண்றவா, அது முடிச்சதும் விரதத்தை விதியா உத்தியாபனம் பண்ணனும்
வெள்ளியால ௩௦, ௨௦ இல்லைன்னா ௧௦ பவன் தூக்கத்துல சிவபெருமாளோட பிரதிமை பண்ணனும்
நாலு கைகள்ல மான், பரசு, அபய முதிரை, பரத முதிரை இந்த மாதிரி பிரதிமை உருவாக்கணும்
உத்தியாபனத்துக்கு முதல் நாள் உரிக்கல்
அன்னைக்கு திவசம் முழுவதுமா சிவபுராணம் ஸ்ரவணம் பண்ணோம்
ராத்திரி நாலியாமம், சிவஸ்தோத்திர பாராயணம், பூஜை, பிரதக்ஷிணம்
உத்யாபனத்துக்கு ஒரு நல்ல மண்டபம் உருவாக்கணும்
அலங்காரங்கள், தோரணங்கள் எல்லாம் சேர்ந்த ஒரு மண்டபம்
அந்த மண்டபத்துல ஒரு பீடம் வச்சு கங்காஜலம் நிறைச்ச கலசத்திலேயோ, சிவலிங்கத்திலேயோ சுவாமியை அம்பாளையும் பூஜை பண்ணனும்
பக்கத்துல அந்த வெள்ளி பிரதிமையை வச்சு அதுக்கும் பூஜை பண்ணனும்
பஞ்சாமிருதத்தினாலேயும் பஞ்சகவ்யத்தினாலேயும் அபிஷேகம் பண்ணனும்
ராத்திரி நாலு யாமத்திலேயும் ஹோமம் பண்ணோம்
மிருத்யுஞ்சய மந்திரத்தினாலே 108 ஆவிருத்தி ஹோமம்
முதல் யாமத்தில நெய், ரெண்டாவது யாமத்தில சர்க்கரை
மூணாவது யாமத்துல திருப்பி நெய்
நாலாவது யாமத்துல பாயாசம்
கார்த்தால குளிச்சு திருப்பியும் அன்னவும் நெய்யும் சேர்த்து 108வது ஹோமம்
மண்டபத்துல ௧௩ பால் குடங்களை வச்சு வேதம் தெரியுற பிராமணால பூஜை பண்ணி அன்னம் வெல்லம்
நெய் இதெல்லாம் வச்சு அந்த குடங்களை தானம் பண்ணனும்
குருநாதருக்கு பாத பூஜை பண்ணனும்
ராத்திரி இரண்டாவது யாமத்துல தம்பதி பூஜை பண்ணனும்
மறுநாள் காத்தால ஸ்நானமானதும் அந்த வெள்ளி பிரதிமையை வஸ்திரம், தட்சிணை இதெல்லாம் வச்சு குருநாதருக்கு தானம் பண்ணனும்
ஒரு பசுமாடு குழம்பில வெள்ளியும் கொம்புல கனகவும் வாலுல முத்து மாலையை அலங்காரம் பண்ணி
கன்னுக்குட்டியையும் கரக்கர பாத்திரத்தையும் சேர்த்து தானம் பண்ணனும்
அவாவா சக்திக்கு தகுந்தபடியா மத்த தானங்களும் பண்ணலாம்
இந்த தானங்கள் எல்லாம் பண்ணி மறுநாளைக்கு பந்துக்களும் நண்பர்களும் எல்லாரும் சேர்ந்து பாரணை பண்ணி விரதத்தை முடிக்கணும்
பாரணைனா விரதம் முடிச்சு பண்ற ஆகாரம்
பிரம்மாவும் பெருமாளும் வரை சோமவார விரதம் பண்ணிருக்கா
தனம், தானியம், சம்பத்து, வம்ச விருத்தி இதுக்கெல்லாம் சோமவார விரதம் ரொம்பவே விசேஷமானது
ஹாலாஸ்ய நாதாய நமஹ
Astrology
Bhagavad Gita
Bhagavatam
Bharat Matha
Devi
Devi Mahatmyam
Ganapathy
Garuda Puranam
Glory of Venkatesha
Hanuman
Kathopanishad
Mahabharatam
Mantra Shastra
Mystique
Practical Wisdom
Purana Stories
Radhe Radhe
Ramayana
Rare Topics
Rigveda Explained
Rituals
Sages and Saints
Shiva
Spiritual books
Sri Suktam
Story of Sri Yantra
Temples
Vedas
Vishnu Sahasranama
Yoga Vasishta