நட்சத்திர சிந்தாமணி : (முதல் பாகம்) அசுவினி முதல் பூரம் முடிய

nakshatra chintamani part 1 pdf

பரணியில் நின்ற குருவை
1. சூரியன் பார்த்தால்: உண்மையானவன். சமூகத் தொண்டன், புகழும் அதிர்ஷ்டமும் உண்டு.
2. சந்திரன் பார்த்தால்: பெரியோரை மதிப்பவன். புகழ் உண்டு. நல்லவர்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்பவன். அமைதியை நாடுபவன். நல்ல காரியங்களையே செய்பவன்.
3.செவ்வாய் பார்த்தால்: கடின சித்தன். பணத்தை வீண் விரையமும், தேவையற்றவைக்கும் செலவு செய்பவன். ஆவான். துஷ்டர்களை அடக்குபவன். அரசு பதவியில் உள்ளவன். பலரையும் வேலை வாங்குபவன்.
4. புதன் பார்த்தால்: பொய்யன், கொடுஞ்சொல்லன், சண்டைக்காரன். ஒரே சமயத்தில் பல பெண்களை காதலிப்பவன். ஆடம்பர தோற்றம் உள்ளவன்.
5. சுக்கிரன் பார்த்தால்: ஸ்த்ரீ சுகம், படுக்கை சுகம், ஆடை ஆபரணம், வாகனம், வீடு வேலைக்காரர்கள் போன்ற வாழ்க்கையின் சுகபோகங்கள் எல்லாம் நிறைந்தவன்.
6. சனி பார்த்தால்: மனைவி, குழந்தைகளால் சுகமில்லாதவன், கடின சித்தன், பிறருக்கு பயனற்ற யோசனைகளைச் சொல்லுபவன்.
பரணியில் நின்ற சுக்கிரனை
1. சந்திரன் பார்த்தால்: சமூகத்தில் தலைமைப் பதவி வகிப்பவன். அந்த செல்வாக்கால் பல பெண்களுடன் ஈடுபட்டு கௌரவம் இழப்பவன்.
2. செவ்வாய் பார்த்தால்: ஏழை, பணமற்றவன், மதிப்புக் கிடையாது. வாழ்க்கையில் எப்பொழுதும் பறிகொடுத்தல் நிலை.
சுகமில்லை.
3. புதன் பார்த்தால்: வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை சந்திப்பவன். வாழ்க்கையை தான் விரும்பியபடி சுகமாக அனுபவிக்க முடியாதவன்.
4. குரு பார்த்தால்: கவர்ச்சியான தோற்றமுள்ளவன். நல்ல அழகிய மனைவியும் குழந்தைகளும் உள்ளவன். வாழ்க்கையில் இவனுக்கு எல்லா சுகபோகங்களும் குறைவில்லாமல் ஏற்படும்.
5. சனிபார்த்தால்: அதிகம் சிறப்புப் பணம் உள்ளவன். அமைதியை விரும்புபவன். பிறரால் பாதிக்கப்படுபவன். ஏழை பங்காளன்.
பரணியில் நின்ற சனியை
1. சூரியன் பார்த்தால்: கால்நடை, பயிர்த்தொழில் இவற்றால் சம்பாதிப்பவன். நல்லகாரியங்களைச் செய்பவன்.
2. சந்திரன் பார்த்தால்: துஷ்டர்களையும், கெட்டவர் களையும் பின்பற்றுபவன். கடின சித்தன், ஏழை.
3. செவ்வாய் பார்த்தால் : தன்னை போஷிப்பவர் களையே தூஷிப்பவன். நடத்தைக்கேடும், சபல சித்தமும் உள்ளவன்.
4. புதன் பார்த்தால்: பொய்யன், திருடன், ஸ்த்ரீ சுகம் கிடையாது.
5. குரு பார்த்தால்: மிக உயர்ந்த பதவியும், அந்தஸ்தும் உள்ளவன். களத்திர ஸ்த்ரீ சுகமும் பணம், வாகனம் வீடு வேலைக்காரர்கள் ஆகிய சௌகரியங்கள் உள்ளவன்.
6. சுக்கிரன் பார்த்தால்; தன் உத்தியோக விஷயமாகப் பலவகைப் பயணங்கள் செய்பவன். தன் காம இச்சையை தனித்துக்கொள்ள மலடிகளை சுற்றித் திரிபவன். கவர்ச்சியற்ற கருமையான உடல் உள்ளவன்.

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

தமிழ்

தமிழ்

ஆன்மீக புத்தகங்கள்

Click on any topic to open

Copyright © 2025 | Vedadhara test | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize
Whatsapp Group Icon
Have questions on Sanatana Dharma? Ask here...

We use cookies