கர்ப்ப காலத்தில் நலனுக்கான வழிமுறைகல்

Pregnancy

தர்ம சாஸ்திரம் சுகமான கர்ப்ப காலத்திற்காக மற்றும் தாய் சேய் நலத்திற்கான பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளது.

 

Click below to listen to Garbha Rakshambika Stotram 

 

Garbha Rakshambika Stotram

 

மனைவிக்காக

  • மேடு பள்ளமான சாலை, சுற்றுலா, அதிகமாகச் சுவாசிக்கும் நிலைகள், பதற்றமான நிலைகள், படகு சவாரிகள், அதிக பலமான பொருட்களைத் தூக்குதல், வயிற்றுக்கு அழுத்தம் கொடுத்தல் இவைகளை தவிர்க்க வேண்டும்.
  • துயரம், மன அழுத்தம், துன்பம், இவைகளை விலக்கவேண்டும்.
  • அதிகமான வேலையை விலக்கவேண்டும்.
  • பகலில் உறங்காமல் இருக்க வேண்டும்.
  • இரவில் உறங்க வேண்டும்.
  • பும்சவனத்திற்குப் பிறகு உடலுறவு கொள்ளாத இருக்க வேண்டும்.
  • கடுமையான மற்றும் வலுவான மாத்திரைகளை மற்றும் மசாலாக்களை தவிர்க்கவேண்டும்.
  • ஐந்து மாதத்திற்குப் பிறகு மதச் சடங்குகளில் பங்கேற்காமல் இருக்க வேண்டும்.
  • அந்திமாலைப்பொழுதில் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.
  • எறும்பு புற்றுகளின் அருகிலும் சாம்பல் மேடு, எலும்பு, மண்டையோடு அருகில் செல்லாமல் இருக்க வேண்டும்.
  • ஆழமான நீர்நிலையில் குளிக்காமல் இருக்க வேண்டும்.
  • காளியான அறையில் தனித்திருக்க கூடாது.
  • தரையில் ஆணி, சாம்பல் மற்றும் கரி கொண்டு வரையாமல் இருக்க வேண்டும்.
  • கொட்டாவி விடாமல் மற்றும் உடலை வளைக்காமல் இருக்க வேண்டும்.
  • தலைமுடியைக் கட்டி வைத்து இருக்க வேண்டும்.
  • சுத்தமும் சுகாதாரமும் காக்க வேண்டும்.
  • யாரிடமும் சண்டை போடாமலும், அதிகாரம் செய்யாமலும், அமங்கல வார்த்தைகளை உச்சரிக்காமலும் இருக்க வேண்டும்.
  • கால் பாதம் உலர்ந்து இருக்க வேண்டும்.
  • பெரியவர்களுக்கு உதவியும், தானதர்மம் செய்தும், கணவரிடம் அன்பும் மரியாதையும் கொண்டு இருக்க வேண்டும்.
  • அனைத்து பொழுதும் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும்.

 

கணவருக்காக

  • மனைவியின் அனைத்து தேவையான ஆசையையும் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • மூன்று மாதத்திற்குப் பிறகு நீண்ட தூரம் செல்வது, கடலில் குளிப்பது மற்றும் முடி திருத்துதலை தவிர்க்கவேண்டும்.
  • பிணங்களை அடக்கம் செய்வதற்குத் தூக்கிச் செல்வதை தவிர்க்கவேண்டும்.
  • ஏழாம் மாதத்திற்குப் பிறகு யாத்திரை செல்வதை தவிர்க்கவேண்டும்.

 

52.0K

Comments

Gqjzd

ரிஷிகளில் முதலாவதாகத் தோன்றியவர் யார்?

சாக்ஷுஷ மன்வந்தர முடிவில் வருண பகவான் யாகம் நடத்தினார். இதன் காரணமாக ஏழு ரிஷிகள் பூமியில் பிறந்தனர். பிருகு முனிவர் முதலாவதாக ஹோம குண்டத்திலிருந்து தோன்றிய ரிஷி ஆவார்.

சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த மந்திரம் எது?

சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த மந்திரம் - நமசிவாய. இது பஞ்சாக்ஷர மந்திரம் எனப்படும். இந்த மந்திரம் ஓம் உடன் ஓம் நமசிவாய என்ற வடிவத்திலும் உச்சரிக்கப்படுகிறது.

Quiz

திருமண சடங்குகளில் யாருடன் சேர்ந்து மணமகள் லாஜ ஹோமம் செய்கிறாள்?
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |